ETV Bharat / bharat

நாடாளுமன்ற தொடர் நடவடிக்கைகளை சுமூகமாக நடத்த ஆலோசனைக் கூட்டம்!

author img

By

Published : Sep 16, 2020, 10:58 PM IST

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தொடர்
நாடாளுமன்ற தொடர்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இந்த வாரம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெறுவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரஹ்லாத் ஜோஷி, அர்ஜுன் மேக்வால், வி.முரளிதரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இதையடுத்து, நாடாளுமன்ற அலுவல் பணிகள் சமூகமாக நடைபெற இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.