ETV Bharat / bharat

'இ-மருத்துவமனைகளில் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட்' - ரவிசங்கர் பிரசாத்

author img

By

Published : Feb 10, 2021, 3:42 PM IST

டெல்லி: 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் இதுவரை 420 இ-மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Ravi Shankar Prasad
ரவிசங்கர் பிரசாத்

மத்திய அரசின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 420 இ-மருத்துவமனைகள்(e-Hospitals) நிறுவப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இ-மருத்துவமனை என்பது டிஜிட்டல் இந்தியாவின் ஒரு முயற்சியாகும். இது நாட்டு மக்களுக்கு முக்கிய மருத்துவமனைகளில் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதை எளிதாக்கியுள்ளது. தற்போது, மக்கள் ஆன்லைனில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதால், வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. செப்டம்பர் 2015 முதல் தற்போதுவரை 18.37 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன" எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ள கிராஃப் படி, நோயாளிகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் ஆகிய மூவரையும் டிஜிட்டல் தளத்தில் இணைப்பதற்கான தீர்வாக இ-மருத்துவமனை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மத்திய அரசின் வெற்றித் திட்டங்களை வாசித்தால் நேரம் போதாது - ஓ.பி. ரவீந்திரநாத் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.