ETV Bharat / bharat

’வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது!!

author img

By

Published : Nov 4, 2022, 1:10 PM IST

’பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி’ ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்தவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

’வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது!!
’வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது!!

புதுச்சேரி: அருகே லப்போர்த் வீதியை சேர்ந்தவர் ஸ்டாலின் 35. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சின்ன கொசப்பாளையம், ஏழை மாரியம்மன் கோவில் வீதியில் மெமூத் அசோசியேட்ஸ் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்துள்ளார்.

புதுவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 20க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் சுமார் ரூ.25 லட்சம் பெற்று கொண்டு அவர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டு தலை மறைவாகி விட்டார்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ராஜேஷ் கடந்த 09.3.2022 அன்று கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகி இருந்த ஸ்டாலினை எண்ணூர் காமராஜர் நகரில் உருளையன்பேட்டை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க:ரயில் மீது கல்வீசி தாக்கியவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.