தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று (ஜன.14) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் போராட்டத்திற்காக கடந்த வாரம் புதுச்சேரிக்கு பாதுகாப்பிற்கு வந்திருந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜன.14) பொங்கல் பண்டிகையில் கொண்டாடும் வகையில் அவர்கள் சார்பில் புதுச்சேரி மெரினா கடற்கரையிலுள்ள அரசு சுற்றுலா கட்டடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தலைவர்கள் கொண்டாடும் 'மாஸ்டர்' பொங்கல்