ETV Bharat / bharat

மணிப்பூர் விவகாரம் : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

author img

By

Published : Jul 31, 2023, 4:10 PM IST

Updated : Aug 1, 2023, 7:08 PM IST

மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 11 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

Parliament
Parliament

Parliament Adjourned

டெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து நாளை (ஆகஸ்ட். 1) காலை 11 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. நாடாளுமன்றம் தொடங்கியது முதலே மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரச் சம்பவங்கள் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தை அமைதியான முறையில் நடத்து பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணிப்பூர் விவகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் இரண்டாம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி புனே செல்ல உள்ள நிலையில், அதன் மறுநாள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை. 31) வழக்கம் போல் 11வது நாள் நாடாளுமன்றக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடிய நிலையில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை மேற்கொள் காட்டி தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து நாளை (ஆகஸ்ட். 1) காலை 11 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை ஒத்திவைத்தார். ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் மழைக் கால கூட்டத் தொடர் நிறைவு பெறும் நிலையில், அதற்குள் டெல்லி அவசர சட்டம் உள்ளிட்ட திட்டமிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க : Twitter logo: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்சில் ட்விட்டர் லோகோ மாற்றம்! நீல பறவைக்கு விடுதலை!

Last Updated : Aug 1, 2023, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.