ETV Bharat / bharat

ஆந்திராவில் பழங்குடியினரைக் கொன்ற மாவோயிஸ்டுகள்!

author img

By

Published : Mar 6, 2021, 10:14 PM IST

கோட்டபாலம்: விசாகப்பட்டினம், கோட்டபாலத்தில் இன்று (மார்ச் 6) மாவோயிஸ்டுகளால் பழங்குடியினர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டவர்
மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டவர்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டபாலம் கிராமத்தில் வசித்துவந்த மாவோயிஸ்ட்டைச் சார்ந்த கோர்ரா பில்கு என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காவல் துறையிடம் சரணடைந்தார்.

மாவோயிஸ்டுகளால் கொலைசெய்யப்பட்டவர்

இதனையடுத்து, 20 மாவோயிஸ்டுகள் சேர்ந்து பில்குவின் வீட்டைத் தாக்கி, கோடாரியால் கண்மூடித்தனமாக பில்குவை கொன்றனர். தடுக்கவந்த அவரின் மனைவியையும் தாக்கினர்.

மாவோயிஸ்டுகள் விட்டுச்சென்ற கடிதம்
மாவோயிஸ்டுகள் விட்டுச்சென்ற கடிதம்

கடிதம்

மாவோயிஸ்டுகள் செல்லும்போது, ஒரு கடிதத்தை விட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் உள்ளூர்வாசிகள் பீதியடைந்தனர்.

இதையும் படிங்க:வருது தேர்தல்... 5 மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள்? இறுகும் இரும்புக்கரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.