ETV Bharat / bharat

ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

author img

By

Published : Jun 16, 2021, 7:51 PM IST

Updated : Jun 16, 2021, 8:56 PM IST

ஆந்திரப் பிரதேசத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வனப்பகுதியில் வேறு மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளனரா என காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

Maoists killed in Andhra  Maoists killed in Andhra operation  encounter in andhra  ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை  மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை  மாவோயிஸ்டுகள்
Maoists killed in Andhra Maoists killed in Andhra operation encounter in andhra ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை மாவோயிஸ்டுகள்

விசாகப்பட்டினம்: ஆந்திர காவலர்கள்- மாவோயிஸ்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தீகலமீட்டா காட்டு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர காவலர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் காவலர்கள் தீவிரமாக ரோந்து சுற்றிவந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் இன்று (ஜூன் 16) அதிகாலை, காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து காவலர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை காவலர்கள் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

மேலும், வேறு மாவோயிஸ்டுகள் அங்கு பதுங்கியுள்ளனரா என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : யூ-டியூபர் மதனின் மனைவி கைது!

Last Updated : Jun 16, 2021, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.