ETV Bharat / bharat

நிலத் தகராறில் இளம்பெண் கொலை... 3 வீடுகள் எரிப்பு...

author img

By

Published : Jun 11, 2022, 6:14 PM IST

மாகாராஷ்டிராவில் நிலத்தகராறு காரணமாக 20 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணனை காக்க முயன்ற இளப்பெண் கொலை
அண்ணனை காக்க முயன்ற இளப்பெண் கொலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் கட்கரி வஷ்தி எனும் பகுதியை சேர்ந்தவர் சரத் மஹடு வகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலத்தகராறு இருந்துவந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன் 11) அதிகாலை 20 பேர் கொண்ட கும்பல் சரத் மஹடு வகாவின் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சரத் மஹடு வகாவின் சகோதரி லக்‌ஷ்மி (20) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே அந்த கும்பல் 3 வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் போராட்டத்தில் வன்முறை - 2 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.