ETV Bharat / snippets

“மதுரை நீதிமன்ற நீதிபதியை பணியில் இருந்து நீக்குக”.. தபெதிக வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 8:35 PM IST

திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில்   பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசிய போது
திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசிய போது (PHOTO CREDIT-ETV BHARAT TAMIL NADU)

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. அந்த கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜீ.ஆர்.சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும், அதனால்தான் சவுக்கு சங்கருக்கு வழக்கிலும் நியாத்திற்கு விரோதமாக தீர்ப்பளித்துள்ளதாக கூறினார். மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜீ.ஆர்.சாமிநாதனை உடனடியாக சென்னை உயர் நீதிமன்றம் பணியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.