சிறப்பாக நடந்த பச்சக்காளி மற்றும் பவளக்காளி திருவீதியுலா, ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். - PachaKali Pavalakkali

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 1:08 PM IST

thumbnail
சிறப்பாக நடந்து பச்சக்காளி மற்றும் பவளக்காளி திருவீதியுலா (video credit-ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம்போட்டை எல்லையா தெருவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பிட்சாடணமூர்த்தி கோயில்.  நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த கோயில், திருமணம் ஆன குழந்தை இல்லாத பெண்கள் குழந்தை வரம் வேண்டி நிறைவேறும் தலமாகவும் இருந்து வருகிறது. 

இதன் 110ம் ஆண்டு பெருவிழா கடந்த மே 6ம் தேதி திங்கட்கிழமை அன்னக்கொடி ஏற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கி, மே 7ம் தேதி செவ்வாய்கிழமை அமுது படையல் அன்னதான விழாவும், திருக்கயிலாயக்காட்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே 8ம் தேதி புதன்கிழமை பிட்சடணமூர்த்தி நிர்மாலய தரிசனமும் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்றிரவு பச்சக்காளி மற்றும் பவளக்காளி வெள்ளிப்பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. 

இதில் 50க்கும் மேற்பட்ட நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள்  இசை முழங்க, மகாமக குளத்தை சுற்றி நடைபெற்ற திருவீதி உலாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனமேலும் இன்று 14ம் தேதி செவ்வாய்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்கான விழா இனிதே நிறைவு பெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.