பழனி கோயிலுக்கு ரூ.26 லட்சம் மதிப்புள்ள பேருந்தை வழங்கிய பக்தர்! - bus donation to palani temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 3:39 PM IST

thumbnail
பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் கடந்த இரண்டு மாதமாக தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மூன்று கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பக்தர்கள் நடந்து சென்று முருகனை தரிசிக்க மலை மீது செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் பேட்டரியில் இயங்கும் கார்கள் மற்றும் ஒரு மினி பேருந்தை இலவசமாக இயக்கி வருகிறது. இந்நிலையில், பக்தர்கள் கிரிவலப் பாதையில் எளிதாக சென்று வர பழனியைச் சேர்ந்த ஜவகர் கட்டுமான நிறுவனம், ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான பேருந்தை வாங்கி பழனி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

இதன்படி, பாத விநாயகர் கோயில் முன்பு புதிதாக வாங்கப்பட்ட பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் நன்கொடையாக வழங்கப்பட்ட பேருந்தை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார். பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் இந்த பேருந்து இலவசமாக இயக்கப்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.