தென்காசியில் சாலையில் தாழ்வாகத் தொங்கும் கேபிள் வயரால் தொடர் விபத்து.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி! - CCTV footage of bike accident
Published : May 14, 2024, 6:09 PM IST
தென்காசி: பிரானூர் பார்டர் மற்றும் கொட்டாக்குளத்திற்கு இடையேயான பகுதியில் தமிழ்நாடு அரசின் பாரத் கேபிள் பைபர் வயர், மின் கம்பங்களில் கட்டப்பட்டுச் சென்று வருகிறது. கடந்த மே.12 ம் தேதி சுமார் 1.15 மணியளவில், அவ்வழியாக வந்த கனரக வாகனம் ஒன்றில் பாரத் கேபிள் பைபர் வயர் சிக்கி, சாலையின் குறுக்கே கிடந்துள்ளது.
இந்த சூழலில் பிரானூர் பார்டரில் இருந்து தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று அவ்வழியாக வந்துள்ளது. சாலையின் குறுக்கே வயர் கிடப்பதைக் கண்ட வாகனம் ஓட்டிச் சென்ற நபர், திடீரென வாகனத்தை நிறுத்தியதில், எதிர்பாராத விதமாக அவரது மனைவி சாலையில் விழுந்து காயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்த மக்கள் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
இந்த சூழலில் பிரானூர் பார்டரில் இருந்து தென்காசி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த நபர், குறுக்கே வயர் கிடப்பதைக் கண்டு திடீரென வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பின்னால் அமர்ந்து வந்த அவரது மனைவி சாலையில் விழுந்து காயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்த மக்கள் அவர்களைப் பத்திரமாக மீட்டனர். இதே போல் தென்காசியில் இருந்து பிரானூர் பார்டர்நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ ஒன்று இந்த கேபிள் வயரில் சிக்கி தலைக்குப்புற கவிழ்ந்து சேதமடைந்தது. இதில், ஆட்டோ ஓட்டியவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து ஆட்டோ செங்கோட்டைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சாலையின் குறுக்கே விழுந்து தொங்கிய வயர், இதுவரை சீரமைக்கப்படாமல் சாலையில் குறுக்கையே கிடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து செல்கின்றனர்.