ETV Bharat / state

“அடுத்த 2 நாட்களுக்கு வடதமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்! - TN Weather Report

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:41 PM IST

TN Weather Report: வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

சென்னை: ஏப்.18 மற்றும் ஏப்.19 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் சேர்வலாறு அணை (திருநெல்வேலி), தென்காசி ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டரில் மழை அளவு பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையும், ஒருசில இடங்களில் வெயில் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் வரையும், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 டிகிரி – 37 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 40.4 டிகிரி செல்சியஸ் மற்றும் சேலத்தில் 39.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.6 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்.17) தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்.18 ம் தேதி தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழக உள் மாவட்டங்களில் வரும் ஏப்.19 ம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இதை தொடர்ந்து ஏப்.20 முதல் ஏப்.23 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: வரும் ஏப்.17 முதல் ஏப்.21 வரையிலான நாட்களுல், அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் சற்றே குறையக்கூடும்.

இந்நிலையில் ஏப்.17 ம் தேதி இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலையாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 டிகிரி – 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். மேலும் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக, அநேக இடங்களில் 37 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

இதை தொடர்ந்து ஏப்.18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலையாக, வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 3 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் என இருக்கக்கூடும். தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி – 41 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். அடுத்ததாக ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக வட தமிழக உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் என படிப்படியாக குறையக்கூடும்.

ஈரப்பதம்: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஏப்.17 முதல் 19 தேதி வரை பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: ஏப்.18 மற்றும் ஏப்.19 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 - 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏப்.19 மற்றும் ஏப்.20 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

இதையும் படிங்க: கோத்தகிரியில் திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்திலிருந்து ரூ.8 லட்சம் பறிமுதல்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.