ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஜூன் 7-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு! - Thoothukudi firing incident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 7:30 PM IST

Thoothukudi fire incident: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் பதில்மனு தாக்கல் செய்ய ஜூன் 7ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு உள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிடப்பட்ட போதும், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என ஹென்றி திபேன் புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை! - Thoothukudi POCSO Case

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்ததை எதிர்த்து, மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு உள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட அதிகாரிகளையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் நீதிபதி என்.செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிடப்பட்ட போதும், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என ஹென்றி திபேன் புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை! - Thoothukudi POCSO Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.