ETV Bharat / state

கார்த்திக் குமார் குறித்து பேச சுசித்ராவிற்கு இடைக்கால தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - singer suchitra

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 3:54 PM IST

Suchitra vs Karthik Kumar issue: நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடகி சுசித்ரா மற்றும் சென்னை உயர்நீதிமன்றம்
பாடகி சுசித்ரா மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகர் கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு பிரிந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி பேசியிருந்தார்.

பாடகி சுசித்ராவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி, நடிகர் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தன்னைப் பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, கார்த்திக் குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதையும் படிங்க: தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி.. ஆலந்தூரை அசரவைத்த சீர்வரிசை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.