ETV Bharat / state

கைது நடவடிக்கை.. பெலிக்ஸ் ஜெரால்ட் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! - FELIX GERALD BAIL DISMISSED

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 3:13 PM IST

Madras High Court: பெண் போலீசாரை சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக கூறப்படும் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Madras High Court
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பெண் போலீசாரை அவதூறாக சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்படும் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்ட் தனக்கு முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் டெல்லியில் பெலிக்ஸ் ஜெரால்ட் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கைதுக்கு முன்னதாக, பெலிக்ஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு இன்று (வியாழக்கிழமை) நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ் , “பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த வாரம் கைது செய்யப்பட்டுவிட்டார். அவரின் முன்ஜாமீன் மனு காலாவதி ஆகிவிட்டது. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி “பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுவிட்டதால், அவரின் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது” என்று கூறி பெலிக்ஸ் ஜெரால்டின் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: குண்டாசில் இருந்து தப்ப முடியுமா சவுக்கு சங்கர்? -சட்டம் சொல்வது என்ன? - SAVUKKU SHANKAR Goondas Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.