ETV Bharat / state

தேர்தல் 2024: விடாமுயற்சியில் ஏசிஎஸ்... வேலூரில் வெல்லப் போவது யார்? - Vellore Lok Sabha Election Result

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 6:13 PM IST

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் ((GFX Credit - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட 'சிப்பாய் புரட்சி' நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் வேலூரின் பெருமையாகத் திகழ்கிறது. கர்நாடகாவில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அதிக தூரம் கடந்து செல்கிறது. பாலாற்றின் கரையோரம் தான் வேலூர் அமைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8வது தொகுதியாக வேலூர் தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை திமுகவும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக இரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

2019 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 14,26,991 மொத்தம் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 6,98,644 ஆண் வாக்காளர்கள், 7,78,245 பெண் வாக்காளர்கள் மற்றும் 102 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 10,16,638 நபர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 71.24.

இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த 4,85,340 வாக்குகளும், புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர்.8,141 வாக்குகள் அதிகம் பெற்று கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.

முன்னதாக, திமுக முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் லட்சகணக்கில் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தல் வாக்குப்பதிவு: கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 15,28,273 வாக்காளர்களில் (7,40,222 ஆண் வாக்காளர்கள், 7,87,8385 பெண் வாக்காளர்கள் மற்றும் 213 மூன்றாம் பாலின வாக்காளர்கள்) 11,23,715 பேர் தங்களது வாக்குறுதியை செலுத்தியிருந்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 73.53.

இத்தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கதிர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதே போல் அதிமுக சார்பில் பசுபதியும், புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி. சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மகேஷ் ஆனந்த் போட்டியிட்டனர்.

டஃப் கொடுத்த ஏசிஎஸ்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் மற்றும் வேலூர் தொகுதியில் மக்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளார். இம்முறை பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகம் மீண்டும் களமிறங்கி உள்ளதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக நிலை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்த வரையில் அதிமுக கடந்த முறை மூன்றாவது இடத்தையே பெற்றிருந்தது. இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் அக்கட்சியின் வேட்பாளருக்கு பலனளித்துள்ளதா என்பது ஜுன் 4 ஆம் தேதி தான் தெரியவரும்.

விடாமுயற்சி: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஏற்கனவே மூன்று முறை போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அப்பகுதியில் பிரபல தொழிலதிபராக உள்ளதால் தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வெற்றி?: திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டுள்ள கதிர் ஆனந்த், மக்களின் கோரிக்கைகளுக்கு எந்தளவு தீர்வு கண்டுள்ளார் என்பதும், பாஜக-பாமக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இத்தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒப்பீட்டளவில் அதிமுகவைவிட பாமக வலுவாக உள்ள இத்தொகுதியில், 2019 இல் பெற்ற வெற்றியைப் போல, திமுக மீண்டும் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கான விடை ஜூன் 4ஆம் தேதி தெரியவரும்.

இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்..

வேலூர்: இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட 'சிப்பாய் புரட்சி' நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் வேலூரின் பெருமையாகத் திகழ்கிறது. கர்நாடகாவில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அதிக தூரம் கடந்து செல்கிறது. பாலாற்றின் கரையோரம் தான் வேலூர் அமைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8வது தொகுதியாக வேலூர் தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 5 முறை திமுகவும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக இரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

2019 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 14,26,991 மொத்தம் வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 6,98,644 ஆண் வாக்காளர்கள், 7,78,245 பெண் வாக்காளர்கள் மற்றும் 102 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 10,16,638 நபர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 71.24.

இந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த 4,85,340 வாக்குகளும், புதிய நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட தீபலட்சுமி 26,995 வாக்குகளும் பெற்றனர்.8,141 வாக்குகள் அதிகம் பெற்று கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.

முன்னதாக, திமுக முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகள், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் லட்சகணக்கில் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதாக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தல் வாக்குப்பதிவு: கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 15,28,273 வாக்காளர்களில் (7,40,222 ஆண் வாக்காளர்கள், 7,87,8385 பெண் வாக்காளர்கள் மற்றும் 213 மூன்றாம் பாலின வாக்காளர்கள்) 11,23,715 பேர் தங்களது வாக்குறுதியை செலுத்தியிருந்தனர். மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 73.53.

இத்தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கதிர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதே போல் அதிமுக சார்பில் பசுபதியும், புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி. சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மகேஷ் ஆனந்த் போட்டியிட்டனர்.

டஃப் கொடுத்த ஏசிஎஸ்: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் மற்றும் வேலூர் தொகுதியில் மக்களால் நன்கு அறியப்பட்டவராக இருந்தாலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளார். இம்முறை பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகம் மீண்டும் களமிறங்கி உள்ளதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக நிலை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்த வரையில் அதிமுக கடந்த முறை மூன்றாவது இடத்தையே பெற்றிருந்தது. இந்த நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் அக்கட்சியின் வேட்பாளருக்கு பலனளித்துள்ளதா என்பது ஜுன் 4 ஆம் தேதி தான் தெரியவரும்.

விடாமுயற்சி: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஏற்கனவே மூன்று முறை போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அப்பகுதியில் பிரபல தொழிலதிபராக உள்ளதால் தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வெற்றி?: திமுக சார்பில் மீண்டும் போட்டியிட்டுள்ள கதிர் ஆனந்த், மக்களின் கோரிக்கைகளுக்கு எந்தளவு தீர்வு கண்டுள்ளார் என்பதும், பாஜக-பாமக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இத்தேர்தலின் முடிவைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. ஒப்பீட்டளவில் அதிமுகவைவிட பாமக வலுவாக உள்ள இத்தொகுதியில், 2019 இல் பெற்ற வெற்றியைப் போல, திமுக மீண்டும் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கான விடை ஜூன் 4ஆம் தேதி தெரியவரும்.

இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.