ETV Bharat / state

சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:12 AM IST

Santhan: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான சாந்தன் உயிரிழந்த நிலையில், அவரது உடலை சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Rajiv Gandhi Assassination Santhan
இலங்கையில் சாந்தன் உடல்

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு விடுதலையான இலங்கை தமிழரான சாந்தன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிப்ரவரி 28ஆம் தேதி காலை 7.50 மணியளவில் காலமானார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தனின் உடலை முறைப்படி, பயண ஆவணங்களை மூத்த ஐஏஎஸ் அதிகாரி கொண்டு சரிபார்க்க நியமித்தும், உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், மார்ச் 4ஆம் தேதி இதனை நிறைவேற்றியது குறித்த விளக்கத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்காக, உயிரிழந்த சாந்தனின் உடல் இலங்கை கொண்டு செல்வதற்காக சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. காலை 9:40 மணி விமான மூலம் இலங்கை கொண்டு செல்லப்பட உள்ளது. உயிரிழந்தவரின் உடலை கொண்டு செல்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்வதற்காக உடல் இப்பொழுது கொண்டுவரப்பட்டு, அதிகாலை 4.30 மணி அளவில் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு 9.40 மணியளவில் புறப்பட உள்ளது.

திருச்சி முகாமில் இருந்த சாந்தன், அண்மையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு தன்னை செல்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

அதில் "கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்' எனக் கூறியிருந்த சாந்தன் இன்று தனது தாய் மண்ணிற்கு நிறைவேறாத ஆசைகளுடன் சடலமாக கொண்டு செல்லப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.