விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு துணைமாலையம்மன், சமேத திருமேனிநாதர் ஆலயத்தில் இன்று (மார்ச் 27) நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.