புதுக்கோட்டை: மாவட்டத்தின் நகர்ப் பகுதிகள், திருமயம், பொன்னமராவதி, கொப்பனாபட்டி, வலையபட்டி, தொட்டியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுவட்டார விவசாயிகள் உள்பட பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.