உலக யானைகள் தினம் நேற்று (ஆக.12) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகளுக்குப் பிடித்த உணவான பழங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் அவற்றுக்கு வழங்கப்பட்டன. முதுமலை புலிகள் காப்பக ஆதிவாசி குடியிருப்புகளில் வசிக்கும் சிறுவர்கள் மூலம் யானைகளுக்கு பலாப்பழம், அன்னாசி, வாழை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டன.