கோவை: காரமடை ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், அரங்கநாத பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி சொர்க்கவாசல் வழியாக வெளியேறினர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டவாறே சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Last Updated :Feb 3, 2023, 8:38 PM IST