தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் டியூசன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

By

Published : Mar 17, 2023, 4:39 PM IST

நெல்லையில் டியூசன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான நபர், அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதேநேரம் பள்ளி நேரம் போக வீட்டில் டியூசனும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவிகளிடம், கணித ஆசிரியர் தவறாக நடந்து வந்துள்ளார். 

ஆனால், இதனை வெளியில் சொல்ல மாணவிகள் தயக்கம் காட்டி வந்துள்ளனர். எனவே இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஆசிரியர், டியூசன் படிக்க வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மாணவி ஒருவருக்கு கணித ஆசிரியர், பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி சார்பில் கொடுத்த புகாரின் பேரில், அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது டியூசன் நடத்தி வந்த கணித ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கணித ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

ABOUT THE AUTHOR

...view details