தமிழ்நாடு

tamil nadu

கண்ணாடி கடையில் செல்போன் திருடிய மர்ம நபர்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 7:26 AM IST

கண்ணாடி கடையில் செல்போன் திருடும் மர்மநபர்

ஈரோடு: சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கண் கண்ணாடி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கண்ணாடி வாங்குவது போல நுழைந்த நபர், அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் கண்ணாடி ஆர்டர் கொடுப்பது போன்று பேசி நைசாக கடையை நோட்டமிட்டு உள்ளார். 

பின், வேலை செய்யும் பெண் பில் போடுவதற்கு திரும்பும் வேளையில் அங்கிருந்த செல்போனை திருடி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். பின்னர், பணம் எடுத்து வருவதாக கூறி வெளியே சென்ற மர்ம நபர், நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த பெண் செல்போனைத் தேடிய போது மர்மநபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. செல்போனை மர்ம நபர் திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. 

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில், கண்ணாடி வாங்குவது போல நடித்து மர்ம நபர் கைவரிசை காட்டிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details