குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தனக்கு நேர்ந்த பொருளாதாரப் பிரச்னையால் தனது சித்தி மற்றும் தங்கையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடய அறிவியல் பயின்ற இந்த இளைஞர் வதோதரா மாவட்டத்திலுள்ள கடம்பா கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவருக்கு நேர்ந்த பொருளாதார சிக்கலில் விரக்தியடைந்த இளைஞர் தனது தங்கையை கத்தியால் ஏழு முறை சரமாரியாக குத்தியுள்ளார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST