தமிழ்நாடு

tamil nadu

நள்ளிரவில் சிகரெட் தராததால் கோபம் - அரிவாளால் கடையை உடைத்து குடிமகன் அட்டகாசம்!

By

Published : May 7, 2023, 7:47 PM IST

Ranipet

ராணிப்பேட்டை :அரக்கோணம் அடுத்த கீழாந்துரை கிராமத்தைச் சேர்ந்தவர் காமேஷ். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் (வயது 27), திமுகவில் பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிஷோர் நள்ளிரவு 12 மணிக்கு கடையைத் திறந்து சிகரெட் எடுத்து தருமாறு காமேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு காமேஷ் இந்த நேரத்தில் எல்லாம் கடையைத் திறக்க முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கிஷோர் கடையின் பூட்டை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது கிஷோரின் நண்பர்கள் அஜித்குமார், சதீஷ், விக்னேஸ்வரன், பொதுமக்கள் உள்ளிட்டோர் சேர்ந்து கிஷோரை தடுத்து நிறுத்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் காமேஷ் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு ஒயின் ஷாப் ஒன்றுக்குள் புகுந்து சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கே போன் செய்து பிரபா ஒயின்ஷாப் ஓனரா என்று கேட்பார். அது போன்று நள்ளிரவில் சிகரெட் தருமாறு கடையின் உரிமையாளரிடம் கேட்டும், அவர் தர மறுத்ததால் பூட்டை அரிவாளால் வெட்டிய சம்பவம் அரக்கோணம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details