தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்..

By

Published : Jan 25, 2023, 1:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

தூத்துக்குடி தாமோதரன் நகரை சேர்ந்த ஜோதிவேல் என்பவரது மகன் கார்த்தி (42), இவர் தனது காரில் சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சண்முகபுரம் வந்து கொண்டிருந்த போது, காரை அதிவேகமாக இயக்கியதால் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட. எஸ்ஐ முத்துமாலை சக காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திக்கின் உயிரை காப்பாற்றி பத்திரமாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Last Updated :Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details