தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் பிண அரசியல் தொடங்கியுள்ளது - அண்ணாமலையை மறைமுகமாக சாடிய மாணிக்கம் தாகூர்!

By

Published : Mar 16, 2022, 10:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

மக்களவையில் இன்று பேசிய மாணிக்கம் தாகூர், "தமிழ்நாட்டில் புது வகை அரசியல் தொடங்கியுள்ளது. பிணங்களை வைத்து அரசியல் செய்கின்றனர். குறிப்பாக கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் வந்திருக்கிறார். சிறுவர்கள் தற்கொலையை வைத்து பதற்றத்தை உருவாக்குவதே அவரது வேலையாக இருக்கிறது. அவர்களது மரணங்களை சிறுபான்மை சமூகத்தினருடன் தொடர்புபடுத்தி சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறார். தவறாக தகவல்களை பரப்புகிறார். மதுரை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. பிரதமர் மோடி தலையிட்டு அவரது கட்சியினரை இது போன்ற மலிவான அரசியலில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும்" எனப் பேசினார்.
Last Updated :Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details