தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் தாயார் மறைவுக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி!

By

Published : May 20, 2021, 7:14 AM IST

விருதுநகர்: தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் பிரபாகரின் தாயார் மறைவுக்கு, தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, காவல்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் நேற்று (மே.19) நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் தாயார் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு.

தமிழ்நாடு உள்துறைச் செயலாளராகப் பணியாற்றி வருபவர் பிரபாகர். இவருடைய தாயார் ராஜாமணி அம்மாள், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மேட்டுத்தெருவில் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜாமணி அம்மாள் நேற்று முன்தினம் (மே.18) உடல்நலக்குறைவால் காலமானார்.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக மேட்டுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடலுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உள்துறை செயலாளர் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்!

மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன், காவல்துறை, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : ’தமிழ்நாட்டின் கல்விச் சூழலுக்கு பல விதங்களில் இயக்குநர் பதவி அவசியமானது’ - திருமாவளவன் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details