விருதுநகர்:Sexual harassment:ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர், கருப்பசாமி. இவரது மகன் வினீஸ்குமார் (27). இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அன்று, இரவு 12 மணிக்கு 10ஆவது படிக்கும் மாணவி ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி, கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் துறையினர், வினீஸ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.