தமிழ்நாடு

tamil nadu

ரூ.3 கோடி மோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜி 2ஆவது முறையாக விசாரணைக்கு ஆஜர்

By

Published : Feb 16, 2022, 1:59 PM IST

ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த ஜனவரி 5ஆம் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜேந்திரபாலாஜி ஜனவரி 13ஆம் தேதி வெளியே வந்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எப்பொழுது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக ராஜேந்திரபாலாஜி தரப்பில் அவரது வழக்கறிஞர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடிதம் தாக்கல் செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்

இந்தநிலையில், 2ஆவது முறையாக இன்று(பிப்.16) விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஸ்தாஸ் ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: எட்டு மாத ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றம் - திமுக தலைவர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details