தமிழ்நாடு

tamil nadu

உரிய அனுமதியில்லாத 150 மதுபாட்டில்கள் பறிமுதல்!

By

Published : Apr 3, 2021, 6:00 AM IST

விருதுநகர் : ராஜபாளையம் அருகே உரிய அனுமதியின்றி ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட 150 மதுபாட்டில்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்
ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாலையாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பங்கஜம், சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த முருகன் (49) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது உரிய அனுமதியின்றி ஆட்டோவில் 150 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுவது விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக மதுபாட்டில்களுடன் ஆட்டோவை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

கட்சி தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதா? அல்லது விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க :சேலம் அதிமுக கோட்டை! - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details