தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரம் மணல் கடத்தல்: 4 டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டுவண்டிகள் பறிமுதல்!

By

Published : Jul 13, 2020, 8:19 AM IST

விழுப்புரம்: தென்பெண்ணை ஆறு, மணியம்பட்டு உள்ளிட்ட ஆறுகளில் மணல் கொள்ளைகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதோடு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மணல் கடத்தல்  விழுப்புரம் செய்திகள்  viluppuram latest news  மணல் கடத்தல்  sand theft
விழுப்புரம் மணல் கடத்தல்: 4 டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டுவண்டிகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மணல் திருட்டைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதல்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று(ஜூலை 12) திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரேசபுரம் தென்பெண்ணை ஆறு, செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணியம்பட்டு ஆறு உள்ளிட்டப் பகுதிகளில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு டிராக்டர், 1 ஜேசிபி, 10 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:செய்தி தொலைக்காட்சி பாணியில் 'பொய்யான தகவல்' பரப்பிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details