தமிழ்நாடு

tamil nadu

லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பத்து பேர் படுகாயம்

By

Published : Aug 20, 2022, 9:29 PM IST

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் அழுக்கு பாலம் என்ற இடத்தில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்அருகே விக்கிரவாண்டி அழுக்கு பாலத்தின் கீழ் இன்று (ஆக.20) திருச்சி மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரி மீது மோதியதில் பேருந்து பயணிகள் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரிமீது ஆம்னிபேருந்து மோதியதில் 10 பேர் படுகாயம்

மேலும், இந்த கோர விபத்து குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் போலி நகை கொடுத்து மோசடி.. போலீசாரின் மனைவிக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details