விழுப்புரம்: விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு (ஜூன் 15) கனமழை பெய்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து விழுப்புரம் நகரை இணைக்கும் முக்கிய தரைப்பாலமான கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதனால் மக்கள் இன்று அதிகாலையில் இருந்து விழுப்புரம் நகருக்குள் பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தெரிவிக்க அரசு அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் தொடர்பு கொண்டும், அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகவலை அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அப்பகுதிக்கு நேரடியாக சென்று வெள்ள நீரில் இறங்கி பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டார். இதையடுத்து பொன்முடி கூறுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இங்கு இருக்கும் இரண்டு மழை நீர் இறைக்கும் மின் மோட்டார்களை பராமரிக்காமல் வைத்துள்ளனர்.