தமிழ்நாடு

tamil nadu

அதிமுகவை சசிகலா உடைக்க முடியாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

By

Published : Jun 17, 2021, 4:54 PM IST

விழுப்புரம்: அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா ஒருபோதும் அதிமுகவை உடைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஒன்றிய நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .

அதிமுக மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டார்.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

அப்போது அவர் பேசியதாவது, "நடந்து முடிந்த தேர்தலில் 75 சட்டப்பேரவை உறுப்பினர்களை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சசிகலா செயல்பட்டு வருகிறார். அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா ஒருபோதும் அதிமுகவை உடைக்க முடியாது.

மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவை அவரால் அசைத்துக் கூட பார்க்க முடியாது. அவரின் கனவு ஒரு போதும் பலிக்காது. அதிமுக கழகத்தை சசிகலா எந்தச் சூழ்நிலையிலும் நெருங்க விடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார்.

சசிகலா ஒருபோதும் அதிமுகவை உடைக்க முடியாது

இதையும் படிங்க: டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details