விழுப்புரம்அடுத்த இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி மற்றும் கவின் நிலவு ஆகிய சகோதரிகள் சிகிச்சைக்காக இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ் சாலையைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி அதி வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இருவர் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவிநிலவு (வயது 7) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த ஈஸ்வரி (வயது 19) விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.