வேலூர்: 2015ஆம் ஆண்டு வேப்பங்குப்பத்தைச் சேர்ந்த சரவணன் (26), அவரது கூட்டாளிகள் ஏழு பேர், செம்மரக் கடத்தல் தொடர்பாக குடிபோதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின் கை கலப்பாக மாறியது.
இவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின்போது சரவணன் கொலைசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொலையை மறைப்பதற்காக உடலை கிணற்றில் வீசியுள்ளனர். இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.
ஒருவர் கைது
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர், கடந்த ஆண்டு நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான மரணம் என்ற பிரிவின்கீழ் பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாறியது.