வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கொட்டாவூர் கிராமத்தில் வசிக்கும் பாண்டியனின் மனைவி யுவராணி (23), பிரசவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, 108 கட்டுப்பாடு அறைக்கு இன்று (பிப்.16) அதிகாலை 1:32 மணிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அணைக்கட்டு பகுதியில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலறிந்த மருத்துவ உதவியாளர் ஜெயலஷ்மி மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு சென்று, பிரசவ வலியில் அவதிப்பட்டு வந்த கர்ப்பிணி யுவராணியை வேப்பங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.