வேலூர்: கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப்பணியாற்றி வந்தவர், சாந்தி. இவர் தற்போது குடியாத்தம் கல்லூரி கால்நடை மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சாந்தி கடந்த 2019ஆம் ஆண்டு மாச்சனூர் கிராமத்தைச்சேர்ந்த சிவச்சந்திரன், அவரது சகோதரர் பிரபுதேவா மற்றும் ராகவேந்திரன் ஆகிய 3 பேரிடமும், கால்நடைத்துறையில் பணியிடம் காலியாக இருப்பதாகவும் ரூ.4 லட்சம் கொடுத்தால் டாக்டர் ரமேஷ் மூலம் வேலை வாங்கித்தருவதாகவும்கூறி 3 பேரிடமும் தலா 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.