வேலூர்: ஹரியான மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்தவர் ரவிகாந்த் லஷ்மணன் ராவ் ஜாரங். இவர் இந்திய அளவில் காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிறுவனத்தின் கிளை சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவிகாந்த் லஷ்மணன்ராவ் ஜாரங் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சீதாராமன் (32) என்பவர் தங்கள் நிறுவனத்தோடு இணைந்து இடைதரகராக வியாபாரம் செய்ய ஆன்லைன் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணபித்து இணைந்ததாகவும், அதன் பிறகு ஏப்ரல் மாதம் வரை சுமார் ரூ.2 கோடி வரை வியாபாரம் செய்த நிலையில் மேலும், வியாபாரத்தை தொடர ஒரு கோடியே 80 லட்சத்தை பெற்றுக்கொண்டு நீண்ட நாள் ஆகியும் பொருட்களை வழங்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமல் அழைக்கழிப்பதாகவும், இது நாள் வரை 70 லட்ச ரூபாய் மட்டுமே வழங்கிய நிலையில் மீதமுள்ள தொகையை செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்ற பிரிவு காவலர்கள், மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலீசார் கூறியதாவது, "சீதாராமன், மேலும் சிலர் இத்தொழிலில் ஈடுபடுவதாக கூறி அவர்களை இணைத்துள்ளார். மேலும் குடியாத்தத்தை சேர்ந்த சத்தீஷ்குமார், வசந்தகுமார், அகரம் சேரியை சேர்ந்த சரவணன் ஆசை தம்பி ஆகிய 3 பேருக்கு சீதாராமனே புதியதாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலம் அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 80 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.
இதில் 70 லட்ச ரூபாய் திருப்பி செலுத்திய நிலையில் மற்ற பணத்திற்கு போலியான ஆவணம் மற்றும் பில்லை தயாரித்து அந்நிறுவனத்தில் வழங்கியுள்ளார். மேலும் இம்மூவரின் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் தனது மனைவி விஜிதா வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.