வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்துவருகிறது. அந்த வகையில் வேலூர் பொன்னை சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர்மழையால் பொன்னை ஆற்றில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில் பொன்னை ஆற்றில் தடுப்பணை இல்லாததால் அந்த தண்ணீர் பாலாற்றில் சென்று கலந்து வீணாக கடலுக்குச் செல்கிறது. எனவே மழைநீரை தேக்கிவைக்கும் வகையில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணைகள் கட்டி மழைநீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.