தமிழ்நாடு

tamil nadu

குங்குமவல்லி தாயாருக்கு வளைகாப்பு!

By

Published : Feb 1, 2020, 1:39 PM IST

திருச்சி: உறையூர் குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணிவித்து 70ஆவது ஆண்டு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

baby shower function held in trichy kungumavalli temple
குங்குமவல்லி தாயாருக்கு வளைகாப்பு

திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் குங்குமவல்லி தாயாருக்கு 70ஆவது ஆண்டு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி ஹோமம், பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும், வளைகாப்பு சம்பிரதாய பூஜைகளும் நடைபெற்று அர்ச்சனை செய்யப்பட்ட வளையல், குங்குமம், திருஉருவப் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

குங்குமவல்லி தாயாருக்கு வளைகாப்பு

இந்த விழாவையொட்டி குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:கொடியேற்றத்துடன் தொடங்கிய செட்டிகுளம் தைப்பூச விழா

Intro:குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. Body:திருச்சி:
குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் குங்குமவல்லி தாயாருக்கு 70ஆவது ஆண்டு வளைகாப்பு திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று காலை கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணி அளவில் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர மாலை 3.30 மணி அளவில் வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் தொடங்கின. மாலை 4.30 மணிக்கு குங்குமவல்லி தாயாருக்கு அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு குங்குமவல்லி தாயாருக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி இத்தகைய வழிபாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details