தமிழ்நாடு

tamil nadu

தங்கம் கடத்தல்: ரூ.75 லட்சம் மதிப்பிலான 30 தங்க நாணயங்கள் பறிமுதல் - 3 பேர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 11:06 AM IST

Gold smuggling: திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Gold smuggling in Trichy
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்

திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், ஷார்ஜா, சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (ஜன.13) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாடிக் ஏர் விமானம் வந்தது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 3 பயணிகள் அட்டை பெட்டியின் உள்பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கிலோ 199 கிராம் எடையுள்ள 30 தங்க காசுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.75 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். பின்னர், 3 பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் எந்த நோக்கத்திற்காக சட்ட விரோதமாக தங்கத்தை கடத்தி வந்தார்கள். அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா, வேறு வழக்குகள் இவர் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா, இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார் என அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது.

சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆகவே, கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: ஜன.16-ல் சூரியூர் ஜல்லிக்கட்டு: சூடுபிடிக்கும் ஜல்லிக்கட்டு மைதானம்..!

ABOUT THE AUTHOR

...view details