திருவண்ணாமலை நகராட்சி ஈசானியம் மைதானத்தில் சுமார் 13.64 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை கோயிலில் பௌர்ணமி, சித்ரா பௌர்ணமி, தீபத்திருவிழா நாள்களில் 120 முதல் 270 மெட்ரிக் டன் வரை சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள உரக்கிடங்கில் தான் சேகரிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நிலம், காற்று, நிலத்தடி நீர் மாசுபடுதல், குப்பை கூலம் தீப்பற்றி எரிவது போன்றவை ஏற்படுகிறது. இந்நிலையில், இதனை தடுக்கும் வகையில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகமானது, நகராட்சியில் உள்ள மரபுவழி குப்பைகளை அகற்ற தூய்மை பாரத திட்டத்தின் மூலம் ரூ. 3.6 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.