தமிழ்நாடு

tamil nadu

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பயந்து மாணவி தற்கொலை: 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற சோகம்

By

Published : Jun 20, 2022, 3:36 PM IST

திருப்பத்தூரில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுக்கு பயந்து மாணவி தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக
தற்கொலை தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக

திருப்பத்தூர்:ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், இவரது மகள் ரூபாஸ்ரீ (17). இவர் காவலூர் சத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருந்தார்.

கடந்த சில நாட்களாக ரூபாஸ்ரீ தனது பெற்றோரிடம் தேர்வு சரியாக எழுதவில்லை எனவும்; தனக்கு குறைவான மதிப்பெண்கள் கிடைக்கும் எனவும் தொடர்ந்து கூறிவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று(ஜூன் 19) மாலை ரூபாஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் ரூபாஸ்ரீயை இரவு முழுவதும் பல இடங்களில் தேடியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று (ஜூன் 20) காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் ரூபாஸ்ரீயை சடலமாக மீட்டுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவலூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் ரூபாஸ்ரீ 70% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல; தற்கொலையை கைவிடுக

இதையும் படிங்க: கோவையில் தற்கொலையை தடுக்க சிறப்பு ஆலோசனை மையம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details