தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் ஒரேநாளில் 74 பேருக்கு கரோனா

By

Published : Sep 4, 2020, 7:59 PM IST

திருப்பத்தூர்: மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) ஒரேநாளில்  74 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யபட்டுள்ளது.

கரோனா
கரோனா

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 4) ஒரேநாளில் 74 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 594 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் 59 ஆயிரத்து 268 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,335 பேர் பரிசோதனை முடிவிற்காக காத்திருக்கின்றனர். 2 ஆயிரத்து 577 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details