திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று (நவ.18) காலை முதல் தற்போது வரை கனமழை பெய்துவருவதால், ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பாங்கிசாப் பகுதிகளிலுள்ள வீடுகளில் இன்று (நவ.19) திடீரென மழை நீர் புகுந்தது.
உடனடியாக இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால், வெகுநேரம் ஆகியும் அலுவலர்கள் ஒருவம் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.