திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், அதே கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பாண்டியன் ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் நிதிகளில் முறைகேட்டில் ஈடுப்படுவதாகவும், குறிப்பாக நூறுநாள் வேலை திட்டத்தில் தனது குடும்பத்தினருக்கு வேலை அடையாள அட்டை கொடுத்து பணிக்கு வராமலேயே பணம் பெறுவதாகவும், மத்திய மாநில அரசுகளின் புதிய வீடுகள் கட்டும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவதாகவும், கிராம சபை நடத்துவதாக கூறி தன் உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்து நடத்தி மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டி ஊராட்சி செயலாளரைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து வாணியம்பாடி - அரங்கல்துருகம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.