தமிழ்நாடு

tamil nadu

தனியார் லாட்ஜில் இளம்பெண் சடலம்.. ஏலகிரி மலையில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:37 PM IST

Yelagiri Resort: ஏலகிரி மலை சுற்றுலா தளத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் லாட்ஜில் இளம்பெண் சடலம்.. ஏலகிரி மலையில் நடந்தது என்ன?
தனியார் லாட்ஜில் இளம்பெண் சடலம்.. ஏலகிரி மலையில் நடந்தது என்ன?

திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த எம்.ஆர்.பள்ளி காவல் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஹீமா (வயது 25). மேடை நடன கலைஞரான இவருக்கு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சண்முகம் என்பவருடன் திருமணமாகி விவாகரத்து ஏற்பட்ட நிலையில், தற்போது கணேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், மூன்றாவதாக சந்தீப் என்ற நபருடன் ஹீமா நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. கடந்த 10ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு பத்து பெண்கள் இரண்டு ஆண் நண்பர்களுடன் சென்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு, 11ஆம் தேதி ஏலகிரி மலை சுற்றுலா தளத்தில் தனியார் சொகுசு விடுதியில் அந்த குழுவினர் தங்கியுள்ளனர்.

இதனிடையே, நேற்று (செப்.12) இரவு சந்தீப் உடன் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்த ஹீமா, சிறிது நேரத்திற்கு பிறகு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர், நடந்த சம்பவம் குறித்து சந்தீப், ஹீமாவின் கணவர் கணேஷுக்கு தகவல் கூறியுள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த கணேஷ், விடுதி அறையில் ஹீமா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான போலீசார், இளம்பெண் ஹீமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அளித்த விளக்கத்தில், முழுமையான விசாரணைக்கு பின்னரே இளம்பெண் மரணத்திற்கான காரணம் என்னவென்பது தெரியவரும் என்று கூறினர்.

இதையும் படிங்க: மருத்துவர் மீது பெண் மருத்துவர் பாலியல் புகார்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details